Saturday, 4 January 2014

உங்கள் வாழ்க்கையில் ஜோதிடத்தின் பங்கு என்ன?


எந்த பெரிய முடிவுகளும் எடுக்கும் முன்பு , ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் - உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை , நல்லதொரு ஜோதிடரிடம் காண்பித்து அதன் படி நடந்து கொள்ளவும். ராசி பலன்கள் என்று கூறப்படும் அனைத்தும் பொதுவான பலன்களே. அதை மட்டுமே முழுக்க நம்பி , எந்த பெரிய காரியத்திலும் இறங்க வேண்டாம்.
பொதுவில் மனிதன் துன்பத்தில் சிக்கி சீரழியும்போது தான் - ஜோதிடம் பக்கமே திரும்புகிறான். நல்ல ஜோதிடர்கள் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் படி, நம்பிக்கை அளிக்கும்படி பேசி , உரிய காலம் வரை பொறுத்துக் கொள்ளவும் , நற்பலன்கள் பெற தகுந்த இறை வழிபாடு பரிகாரங்களை சொல்லியும் - வழி நடத்துவார்கள்.

No comments:

Post a Comment